tamilnadu

img

பெட்ரோல் - டீசல் மீது கலால் வரி உயர்வு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை, மார்ச் 14- பெட்ரோல், டீசல் விலையை குறைக்  காமல் அதன் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத் துள்ள அறிக்கை வருமாறு: பெட்ரோல், டீசல் மீதான கலால்  வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ள தால் லிட்டருக்கு ரூ. 4 வரை விலை உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் போது, பெட்ரோல் -  டீசல் விலையை குறைப்பதற்கு மாறாக,  நரேந்திர மோடி அரசு வழக்கம் போல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால்  வரியை உயர்த்தியுள்ளது. 

ஏற்கனவே பெட்ரோல் மீதான கலால் வரி 18.98 காசாக இருந்ததை ரூ. 22.98 ஆகவும், டீசல் மீதான கலால்  வரி ரூ. 14.83 காசாக இருந்ததை ரூ. 18.83 காசாக உயர்த்தியுள்ளது. இதற்கு மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிற்கும் சாலை வரியாக லிட்ட ருக்கு ரூ. 1 உயர்த்தப்பட்டுள்ளது. நரேந்திர மோடி அரசு பதவியேற்ற போது, சர்வதேச அளவில் பெட்ரோ லிய பொருட்களின் விலை வீழ்ச்சியடை யும் போது அதனுடைய பலன் சாதாரண  மக்களுக்கு கிடைக்கும் என அறி வித்தார். ஆனால் தற்போது அதற்கு மாறாக பாஜக ஆட்சிக்கு வந்த 2014க்கு  பிறகு சர்வதேச சந்தையில் பலமுறை  வீழ்ச்சி ஏற்பட்ட போதும் அதற்கேற்றார்  போல் விலையை குறைக்காமல் பெட்ரோல் மீதான கலால் வரி 142 சத விகிதமும், டீசல் மீதான கலால் வரி 429 சதவிகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது பொருளாதாரம் மந்த நிலை ஏற்பட்டுள்ள நேரத்தில் கொரோனா தொற்று குறித்து மக்கள்  மத்தியில் பீதி ஏற்பட்டுள்ள நேரத்தில் பெட்ரோலிய பொருட்களின் வீழ்ச்சியை மக்களுக்கு சாதகமாக குறைப்பதற்கு பதிலாக மோடி அரசு மீண்டும், மீண்டும் கலால் வரியை உயர்த்தி விலையேற் றத்தை செய்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் பல்வேறு சலு கைகளை வாரி வழங்கி வரும் மோடி  அரசு, சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள  பெட்ரோல் - டீசல் விலை வீழ்ச்சியின் பயனை சாமானிய மக்களுக்கு வழங்க  மறுக்கிறது. எனவே மத்திய அரசு உயர்த்தியுள்ள கலால் வரியை திரும்ப  பெறுவதுடன், சர்வதேச சந்தை விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீச லுக்கான சில்லறை விற்பனையில் 30  சதவிகிதம் அளவில் குறைக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்  கூறியுள்ளார்.